மன்னித்து கொள்ளுங்கள்..! இனிமேல் நான் கவனமாக பேசுவேன்..! – காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஆர்.ரமேஷ் குமார்

Published by
லீனா

காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ்குமார் அவர்கள் மன்னிப்பு கோரி ட்வீட்.

நேற்று கர்நாடக சட்டப்பேரவையில் விவசாயிகளின் பிரச்சினை குறித்து பேசப்பட்டது. அப்போது விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசிக்க நேரம் ஒதுக்குமாறு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே, ‘அனைத்து உறுப்பினர்களும் பேச நேரம் ஒதுக்கினால் எப்படி அலுவல்களை மேற்கொள்வது? நீங்கள் என்ன முடிவு செய்தாலும் நான் ஆம் என்று தான் சொல்வேன். இப்போது இங்கிருக்கும் நிலைமை என் கட்டுப்பாட்டை மீறி விட்டதால், இதை நான் சமாளிக்க முடியாது அதனால் அமைதியாக நடப்பதை அனுபவிக்கலாம் என முடிவு செய்துவிட்டேன் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஆர்.ரமேஷ் குமார், ‘ஒரு சொலவடை இருக்கிறது. பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாவிட்டால், அமைதியாகப் படுத்து அனுபவிக்க வேண்டும், நீங்களும் அந்த நிலையில் தான் இருக்கிறீர்கள்’ என்று பேசினார்.

காங்கிரஸ் எம்எல்ஏவின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரது கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ்குமார் அவர்கள் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பாலியல் பலாத்காரம் பற்றி அலட்சியமாகவும், பொறுப்பின்றியும் நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டு கேட்டுக்கொள்கிறேன். கொடூரமான குற்றத்தை சிறுமைப்படுத்தும் எண்ணத்தில் நான் அவ்வாறு பேசவில்லை. எந்த முன் யோசனையும் இன்றி திடீரென்று அவ்வாறு பேசி விட்டேன். இனி மேல் மிகவும் கவனமாக நான் பேசுவேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Recent Posts

அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!

அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!

மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

51 minutes ago

அதிமுக – பாஜக கூட்டணி : “இனி யாரும் பேசாதீங்க..,” கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட இபிஎஸ்?

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…

2 hours ago

“எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!” நயினார் நாகேந்திரன் பேச்சு!

"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…

2 hours ago

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

10 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

12 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

14 hours ago