காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ்குமார் அவர்கள் மன்னிப்பு கோரி ட்வீட்.
நேற்று கர்நாடக சட்டப்பேரவையில் விவசாயிகளின் பிரச்சினை குறித்து பேசப்பட்டது. அப்போது விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசிக்க நேரம் ஒதுக்குமாறு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே, ‘அனைத்து உறுப்பினர்களும் பேச நேரம் ஒதுக்கினால் எப்படி அலுவல்களை மேற்கொள்வது? நீங்கள் என்ன முடிவு செய்தாலும் நான் ஆம் என்று தான் சொல்வேன். இப்போது இங்கிருக்கும் நிலைமை என் கட்டுப்பாட்டை மீறி விட்டதால், இதை நான் சமாளிக்க முடியாது அதனால் அமைதியாக நடப்பதை அனுபவிக்கலாம் என முடிவு செய்துவிட்டேன் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஆர்.ரமேஷ் குமார், ‘ஒரு சொலவடை இருக்கிறது. பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாவிட்டால், அமைதியாகப் படுத்து அனுபவிக்க வேண்டும், நீங்களும் அந்த நிலையில் தான் இருக்கிறீர்கள்’ என்று பேசினார்.
காங்கிரஸ் எம்எல்ஏவின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரது கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ்குமார் அவர்கள் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பாலியல் பலாத்காரம் பற்றி அலட்சியமாகவும், பொறுப்பின்றியும் நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டு கேட்டுக்கொள்கிறேன். கொடூரமான குற்றத்தை சிறுமைப்படுத்தும் எண்ணத்தில் நான் அவ்வாறு பேசவில்லை. எந்த முன் யோசனையும் இன்றி திடீரென்று அவ்வாறு பேசி விட்டேன். இனி மேல் மிகவும் கவனமாக நான் பேசுவேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…