இந்தியாவில் விரைவில் ஃபைசர் தடுப்பூசி வர உள்ளதாகவும், இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்கும் எனவும் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் சொந்த தயாரிப்பான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் தற்பொழுது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி குறித்து தற்பொழுது பேசிய எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் வெளிநாட்டை சேர்ந்த பல தடுப்பூசிகள் இந்தியாவிற்கு விரைவில் வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பைசர் மற்றும் மாடர்னா ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பெறப்பட உள்ளதாகவும் இது பெரியவர்கள் மட்டுமல்லாமல் கொரோனாவின் மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் விதமாக குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வரும் எனவும், இதன் மூலமாக நாட்டில் பலரும் தடுப்பூசிகள் எடுத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…