மகாராஷ்டிராவில் பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்து கொண்டு தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பாஜக தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் , துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவராக இருந்த அஜித்பவார் ஆளுநர் முன் பதவி ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து அஜித்பவார் நீக்கம் செய்யப்பட்டார்.மேலும் பாஜக தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.மேலும் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க எங்களுக்கு பெருபான்மை உள்ளது என கூறி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆளுநர் மாளிகையில் கடிதம் கொடுத்து உள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஆளுநரின் முடிவை கண்டித்து சோனியாகாந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகாராஷ்டிராவில் நடந்தது ஜனநாயக படுகொலை என குற்றம்சாட்டி உள்ளனர்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…