நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா தலைமையில் போராட்டம்..!

Default Image

மகாராஷ்டிராவில்  பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்து கொண்டு தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா  பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பாஜக தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் , துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவராக இருந்த அஜித்பவார் ஆளுநர் முன் பதவி ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து அஜித்பவார் நீக்கம் செய்யப்பட்டார்.மேலும் பாஜக தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.மேலும் மகாராஷ்டிராவில்  ஆட்சியமைக்க எங்களுக்கு பெருபான்மை உள்ளது என கூறி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆளுநர் மாளிகையில் கடிதம் கொடுத்து உள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஆளுநரின் முடிவை கண்டித்து சோனியாகாந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகாராஷ்டிராவில் நடந்தது ஜனநாயக படுகொலை என குற்றம்சாட்டி உள்ளனர்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்