காங்கிரஸ் கட்சியில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 23 மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். சோனியாகாந்தி இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில், கட்சிக்கு நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்பட ஆறு முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காணொளி காட்சி மூலமாக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கி அனல்பறக்கும் விவாதத்துடன் நடைபெற்ற இக்கூட்டம் மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. காங்கிரஸ் கட்சியில் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்றும் அடுத்த ஆறு மாதத்திற்குள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், காங்கிரஸ் கட்சியில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…