முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இன்று காணொளி வாயிலாக நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில், பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங், சட்டிஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் முக ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இடதுசாரி தலைவர்களான டி.ராஜா, சீத்தாராம் யெச்சூரி மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனையில் பங்கேற்கவுள்ளனர்.
சோனியா காந்தி தலைமையில் நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில், தற்போது நடப்பு அரசியல் சூழல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், அதுபோன்று தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவது, மாநில தேர்தல்களில் கூட்டணி வியூகம் வகுப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…
சென்னை : தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் கடன் நிலவரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக பாஜக மாநிலத்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…