டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் மீண்டும் ஆலோசனை..!

Default Image

டெல்லியில், மீண்டும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டார். அந்த  கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், பிரஷாந்த் கிஷோர், அம்பிகா சோனி, திக்விஜய சிங்,  மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அஜய் மக்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில், 2024 பொதுத் தேர்தல், குஜராத் மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில், மீண்டும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், பிரஷாந்த் கிஷோர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்