காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களுடன் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தததையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதனையடுத்து அக்கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார். பின்னர் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியை விட்டு விலகினார். இதனால் கட்சியை பலப்படுத்த முழுநேர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்கள். மேலும், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் விலகியதால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது போன்றவற்றால் கட்சித் தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் பலரும் குரல் எழுப்பினார்கள்.
இந்நிலையில், காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களுடன் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் ஆலோசனையை தொடங்கியுள்ளார். இந்தக் கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் உட்பட மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…