கற்களால் அடித்து கொலை செய்யப்பட்ட மகன்.! தாய் புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த கோவா போலீஸ்.!

Published by
Ragi

கற்களால் தனது மகனை தாக்கி கொன்றதாக தாயார் புகார் அளித்ததை அடுத்து, கோவா போலீஸ் அடுத்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்தனர்.

கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி அதிகாலை 2.17 மணியளவில் அபினா யேஷ்வந்த் சங்கல்கர் என்ற தாயார் தனது மகனான அவினாஷ் யேஷ்வந்த் சங்கல்கரை தெரியாத நபர் ஒருவர் கற்களால் தனது மகனின் தலையிலும், உடலின் மற்ற பகுதிகளிலும் தாக்கி கொலை செய்ததாக கோவா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதனை தொடர்ந்து கொலை செய்த நபரை கோவா போலீஸ் அடுத்த 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர். இதுகுறித்து கோவா காவல்துறை கண்காணிப்பாளர்(SP) ஷோபித் சக்சேனா கூறியதாவது,தாய் புகார் செய்த அடுத்த நொடியிலிருந்து கோவாவில் உள்ள பாபாவின் துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி (SDPO) கஜனன் பிரபுதேசாய் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் துஷார் ஆகியோர் பிஐ சந்தேஷ் சோடங்கரின் உதவியுடன் 5 குழுக்களை அமைத்து கொலை குறித்த விசாரணையை தொடங்கியதாக தெரிவித்தார்.

இந்த கொலை வழக்கில் பல நபர்கள் விசாரிக்கப்பட்டதாகவும், மின்னணு மற்றும் தடவியல் சான்றுகள் சேகரிக்கப்பட்டதாகவும் கோவா எஸ்பி கூறினார். அதனையடுத்து கோவாவை சேர்ந்த முகேஷ் சியோ விநாயக் தேவ்சேகர் என்ற 48 வயதான நபர் தான் குற்றவாளி என்பதை போலீசார் புகார் செய்த அடுத்த 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்தனர் . அதனையடுத்து அவரிடம் நடந்த தொடர் விசாரணையில் தான் அவினாஷை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். இறந்தவருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அது சண்டையாகி கொலைக்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த கொலை குறித்து மேல் விசாரணை நடந்து வருகிறது.

Published by
Ragi

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

34 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

37 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

2 hours ago