ஒரே மேடையில் தந்தைக்கும்-மகனுக்கும் திருமணம் நடந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. மகனுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது.குழ்ந்தையோடு வந்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் ஆனது ஜார்கண்ட் மாநிலம் குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் நடந்துள்ளது.இங்கு பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலான மக்கள் திருமணம் ஆகமாலே ஒன்றாக இணைந்து தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.அதே கிராமத்தை சேர்ந்த ராம்லால் மற்றும் ஷாக்கோரி என்ற தம்பதியினர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக திருமணம் செய்யாமலே டும்பம் நடத்தி வருந்துள்ளனர்.இந்த தம்பதிகளுக்கு ஜித்தீஷ் என்ற மகன் இருக்கிறார்.
இவர்களுடைய மகன் ஜித்தீசும் தன் தாய்-தந்தை போல் திருமணம் செய்யாமலே அருணா என்ற பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்து வந்து உள்ளார். இதனிடையே இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
இவ்வாறு இக்கிராமத்தில் பெரும்பாலானோர் திருமணம் செய்யாமல் தங்களது இல்லற வாழ்வை நடத்தி வருவதை கண்ட ஒரு தொண்டு நிறுவனம் ஒன்று தங்களுடைய சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வருகிறது.அதன்படி தந்தை மற்றும் மகன் இருவருக்குமே ஒரே மேடையில் ஒரே நாளில் திருமணம் செய்து வைக்கப்பட்டு தற்போது அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.இதில் தம்பதிகள் 4 வரும் திருமண ஆடையில் அழகுற காட்சி அளித்தவாறு தங்கள் வீட்டு செல்லத்தை கொஞ்சியவாறு நிற்கின்றனர்.பழங்குடியின மக்கள் மத்தியில் இத்திருமணம் ஆனது வரவேற்ப்பை பெற்றுள்ளது.
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…