60 தொகுதிகள்.. 259 வேட்பாளர்கள்.. 3 முனை போட்டி. வன்முறை சம்பவங்கள்.! திரிபுரா மகுடம் யாருக்கு.?

Published by
மணிகண்டன்

நேற்று நடைபெற்று முடிந்த திரிபுரா சட்டமன்ற தேர்தலில் நடந்த சில களோபர , சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து சிறு சிறு நிகழ்வுகளை பார்க்கலாம்….

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் நேற்று அங்குள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அங்கு மாலை 4 மணி (இறுதி) நிலவரப்படி 81.1% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கூட்டணி : ஆளும் பாஜக பழங்குடியின மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது.  எதிர்க்கட்சியாக இருக்கும்  இடதுசாரி கட்சி (CPM) காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. திரிபுரா -ஐபிஎஃப்டி மற்றும் திப்ரா மோதா ஆகிய கட்சிகளும் மாநில கட்சி அளவில் பிரதான முக்கியத்துவம் பெறுகின்றன.

2018 தேர்தல் முடிவுகள் : கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 56 இடங்களை கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)) கட்சி 16 இடங்களை கைபற்றயது.  திரிபுரா -ஐபிஎஃப்டி  கட்சியானது 8 இடங்களை கைப்பெற்றியது. காங்கிரஸ் கட்சியானது எந்த இடங்களையும் கைப்பற்றவில்லை. இம்முறை கடந்த முறையை (36 இடங்கள்) அதிக இடங்களை பாஜக கைப்பற்றும் என அம்மாநில முதல்வர் வாக்குப்பதிவு செலுத்திவிட்டு பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

பறிமுதல் : கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலை விட இந்த ஆண்டு 2023 சட்டமன்ற தேர்தலின் போது அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம், போதைப்பொருள், இலவசப் பொருட்கள் ஆகியவை 20 மடங்கு அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

படகு பயணம் : திரிபுரா மாநிலம், தலாய் மாவட்டத்தில் உள்ள ரைமா பள்ளத்தாக்கு பகுதி சட்டமன்ற தொகுதியில் குறிப்பிட்ட பகுதி வாக்காளர்கள் வாக்களிக்க தும்பூர் எனும் ஏரியில் படகுகளில் பயணம் செய்து வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

வன்முறைகள் : செபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள போக்ஸாநகர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சிபிஐ(எம்) உள்ளூர் குழு செயலாளர் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்தார். அவர் அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

அதே போல, கோமதி மாவட்டத்தில் உள்ள கக்ராபன் சட்டமன்றத் தொகுதியிலும் இரண்டு சிபிஐ(எம்) வாக்குச் சாவடி முகவர்கள் மர்ம நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். மேலும், மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள கயேர்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பபித்ரா காரின் வாக்குச்சாவடி முகவருடைய வாகனமும் சூறையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாஜக பிரமுகருக்கு நோட்டீஸ் : பாஜக பொதுச் செயலாளர் திலிப் சைகியா  நேற்று தேர்தல் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த சமயத்தில் ட்விட்டரில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தியதாக தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

4 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

4 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

5 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

8 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago