காஷ்மீரில் தற்போது கடும் பனி பொழிந்து வருகிறது.இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.மேலும் கடும் பனி காரணமாக வாகன போக்குவரத்து அங்கு பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஒரு பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. ஆனால் அங்கு பனியால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட்டதால் அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமல் தவித்து வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இராணுவ வீரர்கள் 100 பேர் சேர்ந்து அந்த கர்ப்பிணி கடும் பனி பொழிவில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து தாயும் ,சேயும் நலமாக உள்ளனர்.கடும் பனி பொழிவை பொருட்படுத்தாமல் கர்ப்பிணி பெண்ணை 8 கி.மீ சுமந்து சென்று 2 உயிர்களை காப்பாற்றிய இராணுவ வீரர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இராணுவ வீரர்களின் செயலுக்கு பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…