கர்நாடக அமைச்சர் ஜே.சி.மதுசாமி நேற்று கொரோனா வைரஸை சமூகம் பரவல் குறித்து அச்சம் தெரிவித்ததோடு நிலைமை கைகூடவில்லை என்று பேட்டியளித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,317 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் நேற்று 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 401 அதிகரித்துள்ளது. மேலும் 680 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 10,527 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 14,385 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அவர் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டு நோயாளிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்று துமகுரு மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் மதுசாமி தெரிவித்தார். கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவுகிறது என்று நாங்கள் கவலைப்படுவதாக கூறினார். அதை கட்டுப்படுத்துவது மாவட்ட அதிகாரிகளுக்கு ஒரு அறிவுரை கூறியுள்ளோம். நோய்த்தொற்று காரணமாக துமகுரு மாவட்டத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.யெடியூரப்பா, துணை முதல்வர் அஸ்வத் நாராயண், மருத்துவக் கல்வி அமைச்சர் டாக்டர் சுதாகர் ஆகியோர் கொரோனா வைரஸை சமூக பரவலை குறித்து மறுத்துள்ளனர்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…