டயர் வெடித்ததால் நேர்ந்த துயரம்.! பேருந்து மீது டிரக் மோதி கோர விபத்து.! 6 பேர் பலி.! 

Gujarat Anand District Accident

குஜராத் : ஆனந்த் மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த பேருந்து மீது அவ்வழியாக வந்த ட்ரக் மோதிய விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் அகமதாபாத் வதோரா தேசிய நெடுஞ்சாலையில், அகமதாபாத் நோக்கி தனியார் பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகாலையில் எதிர்ப்பாரா விதமாக டயர் வெடித்த காரணத்தால் பழுதுநீக்கம் செய்வதற்காக சிகோத்ரா கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றுள்ளது.

அப்போது பேருந்தின் பின்புறம் பயணிகள் நின்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் அதிகாலை 4.30 மணியளவில் அவ்வழியாக வந்த டிராக் (லாரி) பேருந்தின் மோதி பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். மருத்துவ சிகிச்சையின் போது தற்போது ஒருவர் உயிரிழந்ததாகANI தளத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த கோர விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் அதில் வாகன ஓட்டுனரும் ஒருவர் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்