#BREAKING: காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக எஸ்.கே.ஹல்தர் நியமனம்

Default Image

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக எஸ்.கே.ஹல்தர்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் காவிரி மேலாண்மை ஆணைய இடைக்கால தலைவராக எஸ்.கே.ஹல்தர் நியமனம் செய்யப்பட்ட நிலையில், அவரின் பதவி காலம் வருகின்ற 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.  இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய இடைக்கால தலைவராக இருந்த எஸ்.கே.ஹல்தர் நிரந்தர தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தர் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக எஸ்.கே.ஹல்தர் இருந்து வருகிறார். இவர் நவம்பர் 31-ஆம் தேதி ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்