ஹைபோவாலின் என்ற ஒரு வயது குழந்தைக்கு கூடுதலாக இருந்த மூன்றாவது காலை நீக்கிய மருத்துவர்கள்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஹைபோவாலின் என்ற ஒரு வயது குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அக்குழந்தைக்கு சாதாரணமாக உள்ள இரண்டு கால்களை தவிர்த்து, மேலும் ஒரு கூடுதல் கால் பின்புறத்தில் இருந்துள்ளது. இது முக்காலி சிதைவு என்று கூறப்படுகிறது.
இந்த கால் நரம்பியல் ரீதியாக அப்படியே இருந்தாலும், காலில் சக்தி குறைவாக தான் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து இக்குழந்தைக்கு 4 மருத்துவர்கள் கொண்ட குழு, 6 மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்த காலை பிரித்து எடுத்துள்ளனர். குழந்தையின் குடும்பத்தார் குறைந்த வருமானம் கொண்டவர்கள். எனவே, இக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று உதவிசெய்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு சுமார் 1.25 லட்சம் செலவாகி உள்ளது.
இந்த அறுவை சிகிச்சையை, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.கே.கெளசல், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது யமின், குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.ஜே.சிங் மற்றும் மூத்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் ரவீந்திரா ஆகியோர் மேற்கொண்டனர்.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…