ஜிம் மற்றும் யோகா நிறுவனங்களில் நபர்களுக்கு இடையில் ஆறு அடி தூரம் கட்டாயம் – சுகாதார அமைச்சகம்.!

Published by
Ragi

ஜிம் மற்றும் யோகா நிறுவனங்களில் நபர்களுக்கு இடையில் ஆறு அடி தூரம் கட்டாயம் இருக்க வேண்டுமென சுகாதார துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

கடந்த திங்களன்று, சுகாதார அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கையில் யோகா நிறுவனங்கள் மற்றும் ஜிம்களில் பயிற்சி செய்யும் போது தனிநபர்கள் இடையில் குறைந்தபட்சம் ஆறு அடி தூரமாவது இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் சுகாதார துறை வெளியிட்ட வழிகாட்டுதலின்படி, கட்டுப்பாட்டு மண்டலங்களின் வெளியே உள்ள பகுதிகளில் மட்டுமே  ஆகஸ்ட் 5 முதல்  யோகா நிறுவனங்கள் மற்றும் ஜிம்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 65 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை.

ஒரு நபருக்கு குறைந்தது நான்கு மீட்டர் சதுர அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மேலும் அதிலுள்ள சாதனங்களை ஆறு அடி தூரம் இடைவெளியில் வைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நுழைவு வாயிலில் சானிடைசர் மற்றும் வெப்ப ஸ்கிரீனிங் ஏற்பாடுகள் இருப்பது கட்டாயம் என்றும், அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் கட்டாயமாக முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் எல்லா யோகா நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் ஆரோக்யாசெட் பயன்பாட்டை பயன்படுத்தலாம். மேலும் வளாகத்திற்கு வெளியே காலணிகளை ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி இடங்களில் வைக்கப்பட வேண்டும்.

உறுப்பினர்கள் மற்றும் மற்ற அனைவரது செக்-இன் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் 95%க்கும் குறைவான ஆக்ஸிஜன் செறிவு உள்ளவர்களை உடற்பயிற்சி செய்ய அனுமதிக்க கூடாது. அவ்வாறு உள்ள நபர்களை மத்திய / மாநில ஹெல்ப்லைன் / ஆம்புலன்ஸ் ஆகியவற்றிற்கு அழைத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago