ஜிம் மற்றும் யோகா நிறுவனங்களில் நபர்களுக்கு இடையில் ஆறு அடி தூரம் கட்டாயம் – சுகாதார அமைச்சகம்.!

Published by
Ragi

ஜிம் மற்றும் யோகா நிறுவனங்களில் நபர்களுக்கு இடையில் ஆறு அடி தூரம் கட்டாயம் இருக்க வேண்டுமென சுகாதார துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

கடந்த திங்களன்று, சுகாதார அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கையில் யோகா நிறுவனங்கள் மற்றும் ஜிம்களில் பயிற்சி செய்யும் போது தனிநபர்கள் இடையில் குறைந்தபட்சம் ஆறு அடி தூரமாவது இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் சுகாதார துறை வெளியிட்ட வழிகாட்டுதலின்படி, கட்டுப்பாட்டு மண்டலங்களின் வெளியே உள்ள பகுதிகளில் மட்டுமே  ஆகஸ்ட் 5 முதல்  யோகா நிறுவனங்கள் மற்றும் ஜிம்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 65 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை.

ஒரு நபருக்கு குறைந்தது நான்கு மீட்டர் சதுர அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மேலும் அதிலுள்ள சாதனங்களை ஆறு அடி தூரம் இடைவெளியில் வைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நுழைவு வாயிலில் சானிடைசர் மற்றும் வெப்ப ஸ்கிரீனிங் ஏற்பாடுகள் இருப்பது கட்டாயம் என்றும், அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் கட்டாயமாக முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் எல்லா யோகா நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் ஆரோக்யாசெட் பயன்பாட்டை பயன்படுத்தலாம். மேலும் வளாகத்திற்கு வெளியே காலணிகளை ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி இடங்களில் வைக்கப்பட வேண்டும்.

உறுப்பினர்கள் மற்றும் மற்ற அனைவரது செக்-இன் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் 95%க்கும் குறைவான ஆக்ஸிஜன் செறிவு உள்ளவர்களை உடற்பயிற்சி செய்ய அனுமதிக்க கூடாது. அவ்வாறு உள்ள நபர்களை மத்திய / மாநில ஹெல்ப்லைன் / ஆம்புலன்ஸ் ஆகியவற்றிற்கு அழைத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Recent Posts

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

3 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

4 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

5 hours ago

எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…

5 hours ago

400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஹைஜேக்… பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…

6 hours ago

அடுத்த 2 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

7 hours ago