சிம்லா : ஹிமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகனமழை பெய்ததில் 5 பேர் பலியாகியுள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் அதி தீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையமும் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் நிலமை அங்கு மோசமடைந்துள்ளது. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், மீட்பு பணிகள் சவாலானதாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவு காரணமாக மணாலி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் சேதமடைந்துள்து. மண்டியின் ராம்பன் கிராமத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் பல இடங்களில் வெள்ளம் போல் ஓடுகிறது.
வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடும் பாதையில் இருந்த வீடுகள் இடிந்து, பல வாகனங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன. அவற்றை ஜேசிபி உதவியுடன் வெளியே இழுக்கும் முயற்சி நடந்து வருகிறது. மண்டியிலும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவிடம் பேசி, மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை ஆய்வு செய்து, மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் வழங்கும் அவருக்கு உறுதியளித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…