பஞ்சாயத்து சமிதி தலைவர் தேர்தலின் போது, ஒடிசாவின் கோர்தா மாவட்டத்தில் பான்பூர் பிளாக் முன்பு கூடியிருந்த கூட்டத்தின் மீது சனிக்கிழமையன்று(நேற்று) சிலிகாவின் பிஜேடி எம்எல்ஏ பிரசாந்த் ஜக்தேவ் தனது காரை மோதியதில்,காவல்துறையினர் உட்பட சுமார் 23 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பான்பூர் தொகுதி அலுவலகம் அருகே,அத்தொகுதி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
பான்பூர் ஐஐசி, எம்எல்ஏ அவர், ஒரு பத்திரிகையாளர் உட்பட பத்து காவல்துறையினர் மற்றும் குறைந்தது ஆறு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இச்சம்பவத்தால் பதற்றம் நிலவியதுடன்,எம்எல்ஏவின் வாகனத்தை அங்கிருந்த மக்கள் அடித்து நொறுக்கினர்.இதனால்,காவல்துறையினர் தலையிட்டு எம்.எல்.ஏவை அந்த இடத்திலிருந்து காப்பாற்ற வேண்டியிருந்தது.எனினும்,பலத்த காயம் அடைந்த எம்எல்ஏ பிரசாந்த்,முதலில் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புவனேஸ்வருக்கு மாற்றப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக,மத்திய ரேஞ்ச் ஐஜி நரசிங் போலா கூறுகையில்:”பிஜு ஜனதா தளம் (பிஜேடி) எம்எல்ஏவை காவல்துறையினரும் சிலரும் கூட்டத்திற்குள் நுழைய விடாமல் தடுக்க முயன்றபோதும்,எம்எல்ஏ தடுக்கப்படுவதைத் தவிர்க்க முயன்றபோதும் அவர் தனது வாகனத்தை கூட்டத்தின் மீது மோதினார்.எனவே,அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று கூறினார்.
இதனையடுத்து,இந்த சம்பவம் தொடர்பாக பிஜேடி தலைவர் சஸ்மித் பத்ரா கூறியதாவது:”ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. எம்எல்ஏவாக இருந்தாலும் சரி, சாமானியனாக இருந்தாலும் சரி வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது”என்று கூறினார்.
இதற்கு முன்னதாக,செப்டம்பரில்,பிரசாந்த் ஜக்தேவ் தனது சிலிகா தொகுதியின் பிஜேபி தலைவரைத் தாக்கிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பிஜேடியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.ஆகஸ்ட் 2020 இல், ஜூனியர் இன்ஜினியர் ஒருவர், ஜக்தேவ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்தார்.மேலும்,2016 ஆம் ஆண்டும், பெண் தாசில்தாரை தாக்கியதாக பிரசாந்த் சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…