கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த 77 உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் மிக அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வந்த நிலையில் பல மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், செவிலியர்கள் சுகாதார துறையை சேர்ந்தவர்கள் மற்றும் முக்கியமான அமைச்சர்கள் கொரோனா இரண்டாம் அலையில் உயிரிழந்தனர். மேலும், இந்த கொரோனா தொற்று காரணமாக உச்சநீதிமன்றத்தை சேர்ந்த 77 வழக்கறிஞர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து நாட்டில் உள்ள உச்ச நீதிமன்றம் முதல் மாவட்ட நீதிமன்றங்கள் வரை அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு, நீதிமன்றப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை உச்ச நீதிமன்றத்திற்கு வந்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்கள் தனது நீதிமன்ற பணியைத் தொடங்குவதற்கு முன்பதாக கொரோனவால் உயிரிழந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியதுடன், உயிரிழந்த 77 உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…