கர்நாடக சட்டப்பேரவையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்றது. மீதம் உள்ள இரண்டு தொகுதிகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.
இன்று கர்நாடகாவில் 15 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாஜக அபார வெற்றிபெற்றது.காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்த 15 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் கர்நாடக சட்டப்பேரவை தொகுதிகள் 222 ஆக அதிகரித்துள்ளது. இதனால், அங்கு பெரும்பான்மை நிரூபிக்க 112 தொகுதிகளை தன்வசம் வைத்திருக்க வேண்டும் .இந்த 15 தொகுதிகளில் 6 தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலையில் பாஜக 12 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதனால் எடியூரப்பா அரசுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…