சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த சித்தப்பாவுக்கு மூன்று ஆயுள் தண்டனை !

Published by
murugan

கேரளாவில் எரூர்  பகுதியை சார்ந்தவர் ராஜேஷ் (25) இவர் அதே பகுதியில் உள்ள அவரது மனைவியின் அக்கா குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். ராஜேஷ் மனைவியின்  அக்கா மகள் அதே பகுதி இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். ராஜேஷ் மனைவியின் அக்கா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த  அக்டோபர் 27-ம் தேதி ராஜேஷ் மனைவியின் அக்கா வீட்டிற்கு சென்றார்.  அப்போது சிறுமியை அவளது பாட்டி டியூசனுக்கு அழைத்து செல்வதை பார்த்து உள்ளார். இதை பார்த்த ராஜேஷ் தான் அழைத்து செல்வதாக கூறி டியூசனுக்கு சிறுமியை அழைத்துச் சென்றார்.

ஆனால் அன்று வெகு நேரம் ஆகியும் அந்த சிறுமியை வீட்டுக்கு திரும்பவில்லை சந்தேகமடைந்த சிறுமியின் பாட்டி டியூசனுக்கு சென்று தனது பேத்தி பற்றி விசாரித்துள்ளார். அங்கு இருந்தவர்கள் உங்கள் பேத்தி வரவில்லை என கூறினர்.பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

மறுநாள் ரப்பர் தோட்டத்தில் அந்த சிறுமி பிணமாக கிடந்தார். அந்த சிறுமியின் உடலை கைப்பற்றிய கொல்லம் போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார் என்பது தெரியவந்தது.

இதை அறிந்து ராஜேஷ் தலைமறைவாகியிருந்தார். தலைமறைவாக இருந்த ராஜேஷை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷிற்கு மூன்று ஆயுள் தண்டனை மற்றும் 26 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கினால்.

மேலும் 3.20 லட்சம் அபராதம் விதித்தார். அபராதம் விதிக்கப்பட்ட தொகையை சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ராஜேஷ் இளம் வயது என்பதால் அவருக்கு தூக்குத் தண்டனை வழங்கவில்லை என கூறினார்.

Published by
murugan

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago