ஹைதராபாத்தில் தனியார் வங்கி ஏடிஎம்-ல் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் காயம்.
சைபராபாத் போலீஸ் எல்லைக்குட்பட்ட குகட்பள்ளியில் உள்ள எச்.டி.எஃப்.சி வங்கி ஏடிஎம்மில் வங்கி ஊழியர்களால் பணத்தை நிரப்பி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு பாதுகாவலர் மற்றும் வங்கி அதிகாரி காயமடைந்தனர்.
காயமடைந்த இருவருமே மருத்துவமனைக்கு அழைத்து செல்லபப்ட்டனர். அங்கு அவர்களின் நிலை சீராகிவிட்டதாக கூறப்படுகிறது. கொள்ளையர்கள் பணத்தை திருடி கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் நடைபெற்றது.
இந்த சம்பவம் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் ஒரு கொள்ளைக் கும்பல் இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அங்கு உள்ள சி.சி.டி.வி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
காவல்துறையினரிடமிருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்குச் சென்று ஆதாரங்களை சேகரித்தது. மேலும் விவரங்களை சேகரிக்க காயமடைந்தவர்களின் அறிக்கைகள் விரைவில் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…