அதிர்ச்சி : மைக்ரோவேவ் ஓவனுக்குள் இறந்த நிலையில் இரண்டு மாத பெண்குழந்தை..!

Published by
லீனா

தெற்கு டெல்லியில் டெல்லியில் நேற்று மதியம் மைக்ரோவேவ் ஓவணுக்குள்  இரண்டு மாத பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அடுப்பிற்ற்குள் 2 மாத குழந்தை 

தெற்கு டெல்லியில் நேற்று மதியம் மைக்ரோவேவ் ஓவணுக்குள்  இரண்டு மாத பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மாலை இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துணியில் சுற்றப்பட்டு இருந்த சிசுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் தாயே குழந்தையை கொன்று இருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகித்ததையடுத்து அவரது தாயாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

குழந்தையை காணவில்லை

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், குழந்தையை காணவில்லை என்று எங்களுக்கு அழைப்பு வந்தது. மாளவியா நகர் காவல் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அக்கம்பக்கத்தினர், குழந்தை மைக்ரோவேவ் அடுப்பில் இருப்பதை கண்டதாக எங்களுக்கு தெரிவித்தனர். ஆனால் குழந்தை எவ்வாறு இறந்தது என்பதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவத்தில் உண்மைத்தன்மை கண்டறிய அவரது தாய் மற்றும் பிற குடும்ப உறுப்பினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

வீட்டை பூட்டிய குழந்தையின் தாய் 

மேலும் இதுகுறித்து குழந்தையின் குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில் குழந்தையின் தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் சம்பவத்தின்போது வீட்டிற்கு அருகிலிருக்கும் பல்பொருள் அங்காடியில் இருந்துள்ளனர். பிற்பகல் 3 மணியளவில் குழந்தையின் தாய் அவரது மூத்த குழந்தையான  4 வயது சிறுவனை அடித்ததாக கேள்விப்பட்டதாக  குற்றம்சாட்டினர்.

அவர்கள் அதை தடுக்க மாடிக்கு விரைந்த போது தன்னையும் தனது மகனையும் அறையில் பூட்டி கொண்டுள்ளார். பின்னர் நாங்கள் கதவை உடைத்து திறந்து பார்த்த போது, அவள் மயக்கமடைந்த நிலையில் இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். இதற்கிடையில் குழந்தையை காணவில்லை என்பதை அறிந்து அவரிடம் கேட்டபோது குழந்தை குறித்து அவர் பேச மறுத்து விட்டாள் என தெரிவித்தனர்.

கொன்றது குழந்தையின் அம்மா தான் 

மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குழந்தையின் தாத்தா நான் கீழே தூங்கிக் கொண்டிருந்த போது சத்தம் கேட்டது. குழந்தையை காணவில்லை என்று கூறினேன். நாங்கள் அனைவரும் அருகில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகளில் தேடினோம். தொட்டிகள் மற்றும் வீட்டில் உள்ள அறைகளுக்கு சென்று பார்த்தோம். சிறிது நேரம் கழித்து சில சிறுவர்கள் மொட்டை மாடிக்கு சென்று அங்குள்ள ஒரு அறையை திறந்தனர். அங்கு குழந்தையின் உடல் மைக்ரோவேவ் அடுப்பிற்குள்  பதுக்கி வைத்திருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். வீட்டில் குழந்தையின் தாய் மட்டும் தான் இருந்ததால் குழந்தையின் அம்மா தான் அவளை கொன்று இருப்பாள்  என்று நினைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

16 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

16 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

17 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

17 hours ago