அசாம் துப்பாக்கி சூட்டில் இருவர் பலி;அடிப்பட்டவர் மீது கொடூரமாக ஏறி மிதிக்கும் புகைப்படக் கலைஞர்..!

Published by
Edison

அசாம் மாநிலத்தில் போலீசார் சுட்டதில் கீழே விழுந்த நபர் மீது புகைப்படக் கலைஞர் ஒருவர் கொடூரமாக ஏறி மிதிக்கும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு,அம்மாநிலத்தில் உள்ள தர்ரங் மாவட்டத்தின் சிபஜார் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு வேளாண் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

அதன்படி,கடந்த திங்கட்கிழமையன்று ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி தொடங்கிய நிலையில்,800 குடும்பங்களின் ஆக்கிரமிப்பில் இருந்த 1,487 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து,மீதமுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக நேற்று நூற்றுக்கணக்கான போலீசார் தோல்பூர் பகுதிக்கு சென்றனர். இதற்கு  அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்,போலீசாருக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.இதனையடுத்து,முதலில் போலீசார் தடியடியையும்,பின்னர் துப்பாக்கி சூடும் நடத்தினர்.

அதுமட்டுமல்லாமல்,துப்பாக்கியால் சுடப்பட்டு கீழே விழுந்த ஒருவரை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கினார்கள்.இந்த தாக்குதலில் பொதுமக்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர் .மறுபுறம்,காவலர்கள் தரப்பில் 9 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,போலீசாரைத் தொடர்ந்து,கீழே விழுந்த அந்நபர் மீது அரசு புகைப்படக் கலைஞர் பிஜோய் போனியா என்பவர் கொடூரமாக ஏறி மிதிக்கும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.இதனால்,ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.எனினும்,ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி பின்னர் தொடரும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும்,காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும்,இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“மாநில அரசே வன்முறையை தூண்டிவிட்டுள்ளது.அசாம் மாநில சகோதர, சகோதரிகளுக்கு உறுதுணையாக இருப்பேன்,எந்த ஒரு குழந்தைக்கும் இதுபோன்ற சூழல் ஏற்படக் கூடாது என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது,இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு,பிஜோய் போனியா கைது செய்யப்பட்டுள்ளார்.

Recent Posts

மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி… தென்னாப்பிரிக்காவை 82 ரன்களில் சுருட்டிய இந்தியா.!

மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…

1 hour ago

கடைசி டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்.!

மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…

2 hours ago

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…

2 hours ago

2ம் ஆண்டில் தவெக… கொள்கைத் தலைவர்களின் சிலையை திறந்து வைத்த விஜய்.!

சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை  பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…

4 hours ago

வரும் 7ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…

4 hours ago

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.! சாதிக்குமா இந்தியா?

லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…

5 hours ago