அதிர்ச்சி : 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கடைக்குள் மனிதனின் கண், காது மூளை கண்டெடுப்பு..! நடந்தது என்ன..?

Default Image

மகாராஷ்டிராவில் 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கடைக்குள் எட்டு மனித காதுகள், மூளை, கண்கள் மற்றும் முக பாகங்களின் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவின் நாசிக்கின் மும்பை நாகா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு கடையில் எட்டு மனித காதுகள், மூளை, கண்கள் மற்றும் முக பாகங்களின் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 15 வருடங்களாக மூடப்பட்டிருந்த கடையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலிசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, போலீசார் இந்த புகார் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மனித முக பாகங்களின் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், போலீசார் இந்த சம்பவத்தை கொலை வழக்காக பார்க்கவில்லை. இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘கடை உரிமையாளரின் மகன்களில் இருவர் மருத்துவ மாணவர்கள் என்றும், மனித உறுப்புகள் மருத்துவ நோக்கங்களுக்காக வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இருப்பினும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்