Categories: இந்தியா

அதிர்ச்சி.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்ம மரணம்!

Published by
பாலா கலியமூர்த்தி

மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்மமாக இறந்து கிடந்தது கண்டுபிடிப்பு.

மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள மைசால் என்ற ஊரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தது காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. தலைநகர் மும்பையில் இருந்து 350 கிமீ தொலைவில் உள்ள சாங்லி மாவட்டத்தில் உள்ள மைசாலில் உள்ள ஒரு வீட்டில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒரு வீட்டில் ஒன்பது உடல்களை கண்டெடுத்தோம் என சாங்லி காவல் கண்காணிப்பாளர் தீக்ஷித் கெடம் கூறியுள்ளார். அதாவது, ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரில், ஒரே வீட்டில் 3 பேர் ஓர் இடத்திலும், 6 பேர் வீட்டில் வேறொரு இடத்தியிலும் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 9 பேரும் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என உடல்களை மீட்ட அம்மாநில காவல்துறை சந்தேகித்துள்ளது. எனினும், பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்றும் இறந்தவர்கள் விஷத்தை உட்கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார். இறந்தவர்கள் சகோதர்களான மாணிக், பொபட் யாலப்பா வான்மோர் குடும்பத்தினர் ஆவர் என்று போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. மாணிக், அவரது தாயார், மனைவி மற்றும் குழந்தைகள் ஒருபுறம் இறந்து கிடந்தனர். பொபட் யாலப்பா வான்மோர், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் வேறொரு இடத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

8 mins ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

17 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

3 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

3 hours ago