பிரியங்காவின் அரசியல் வருகை காங்கிரசுக்கு நல்ல பலனை தருகின்றது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னெடுக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ள. குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கெதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி பொது செயலாளராக அறிவிக்கப்பட்டார் .
இதையடுத்து பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை காங்கிரஸ் கட்சிக்கு புதிய உற்சாகத்தை கொடுக்குமென்று அரசியல் கட்சியினர் தங்களது கருத்தை கூறி வந்தனர். இந்த நிலையில் பாரதீய ஜனதா கூட்டணியுடன் மகாராஷ்டிரா மாநிலத்தின் கூட்டணி ஆட்சியமைத்துள்ள சிவசேனா கட்சி பிரியங்கா_வின் அரசியல் வரவால் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் பலன் அடையும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், இது அரசியலில் ராகுல் காந்தி எடுத்த நல்ல முடிவு என்று பாராட்டி , இந்திரா காந்தி குடும்பத்துடன் நம்நாடு நல்ல உறவு வைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். சிவசேனாவின் இந்த கருத்து பாஜகவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…