மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.அதற்கு காரணம் அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.பாஜக 105 இடங்கள்,சிவசேனா 56 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் கூட்டணி ஒப்பந்தத்தின் படி அங்கு 50-50 என்ற கணக்கில் ஆட்சி நடைபெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.அதற்கு பின்பு யார் ஆட்சி அமைப்பது சிக்கல் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் ஆட்சியமைக்க தீவிரம்காட்டி வந்தது.தொடர்ந்து குழப்பமே நீடித்து வந்த நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த அங்கு மீதமுள்ள கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது .ஆனால் அந்த பேச்சுவார்த்தையிலும் வெற்றி கிடைக்காத நிலையில் தொடர்ந்து குழப்பமே நிலவி வருகிறது.
இந்த நிலையில் இன்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில் ,சிவசேனாவை சேர்ந்தவரே மகாராஷ்டிராவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதலமைச்சராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…