Sharad Pawar opp [Image-HT]
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் நாளை பங்கேற்பார் என தகவல்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில், காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் இன்று மற்றும் நாளை பெங்களுருவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் நடைபெறுகிறது. இதில் 24 எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.
மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், இந்த கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியானதை அடுத்து அக்கட்சி அதனை மறுத்துள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் நாளை சரத்பவார் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. தனது மகள் சுப்ரியா சுலேவுடன், சரத்பவார் கலந்து கொள்வார் என என்சிபி செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சில எம்.எல்.ஏக்களுடன் அஜித் பவார் ஆளும் பாஜக கூட்டணியில் இணைந்தது தொடர்பாக மகாராஷ்டிர அரசியலில் பெரிதும் பேசுபொருளாக ஆனது. இதனால் சரத்பவார் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக வெளிவந்த தகவலை மறுத்து நாளை சரத்பவார் கூட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவித்துள்ளது.
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…