தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.இந்த வகையில் தான் நேற்று பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.துணை முதமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பொறுப்பேற்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைத்தது சிவசேனா -தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனால் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற குழுத்தலைவர் பொறுப்பில் இருந்து அஜித் பவாரை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மும்பையில் தனியார் ஓட்டலில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.தேசியவாத காங்கிரஸ் தலைவர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் பங்கேற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…