மும்பையில் எம்.எல்.ஏக்களுடன் சரத் பவார் ஆலோசனை ! உத்தவ் தாக்கரே பங்கேற்பு

Default Image

தேசியவாத காங்கிரஸ்  எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.இந்த வகையில் தான் நேற்று பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.துணை முதமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பொறுப்பேற்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைத்தது சிவசேனா -தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனால் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற குழுத்தலைவர் பொறுப்பில் இருந்து அஜித் பவாரை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மும்பையில் தனியார் ஓட்டலில் தேசியவாத காங்கிரஸ்  எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.தேசியவாத காங்கிரஸ்  தலைவர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் பங்கேற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்