உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹால், ராம் மஹால் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் தாஜ்மஹால், முகலாயப் பேரரசர் ஷாஜஹான் அவர்களால் கட்டப்பட்டது. இது காதலின் சின்னம் என்று பலராலும் அழைக்கப்படுகிறது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டினார். இந்த தாஜ்மஹாலை காண பல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங், உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹால், ராம் மஹால் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்பு சிவன் கோவில்கள் இருந்ததாகவும், சிவன் கோவிலை இடித்துவிட்டு தான் ஷாஜஹான் தாஜ் மஹாலை கட்டியதாகவும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, இந்தியாவில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் பல வரலாற்று சின்னங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று அவர் ஏற்கனவே அவர் சர்ச்சையான கோரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…