உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹால், ராம் மஹால் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் தாஜ்மஹால், முகலாயப் பேரரசர் ஷாஜஹான் அவர்களால் கட்டப்பட்டது. இது காதலின் சின்னம் என்று பலராலும் அழைக்கப்படுகிறது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டினார். இந்த தாஜ்மஹாலை காண பல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங், உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹால், ராம் மஹால் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்பு சிவன் கோவில்கள் இருந்ததாகவும், சிவன் கோவிலை இடித்துவிட்டு தான் ஷாஜஹான் தாஜ் மஹாலை கட்டியதாகவும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, இந்தியாவில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் பல வரலாற்று சின்னங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று அவர் ஏற்கனவே அவர் சர்ச்சையான கோரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…