பெண்களுக்கு நல்ல அறிவுரைகளை கற்றுக் கொடுத்தால் பாலியல் வன்கொடுமைகள் தடுக்கப்படலாம் – உ.பி பாஜக எம்.எல்.ஏ ..!

Default Image

ஹத்ராஸ் மாவட்டத்தை சார்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் பதினைந்து நாட்கள் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அன்று சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பெரும் உள்ள பல அரசியல் தலைவர்கள் , சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

 ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை இதுதொடர்பாக பேசிய பல்யா உ.பி பாஜக எம்.எல்.ஏ.சுரேந்திர சிங், கத்தியை எடுத்துக்கொண்டு அரசாங்கம் போராடினால் கூட வன்கொடுமை குற்றச்செயல்களை தடுக்க முடியாது.

பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, கலாச்சாரத்தையும், நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுத்து வளர்ப்பதால் மட்டுமே இக்குற்றங்கள் குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கடவுள் ராமரால் கூட பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாது என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்