கடும் அமளி:நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒரு நாள் முன்னதாகவே நிறைவு!

Published by
Edison

டெல்லி:நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் முன்கூட்டியே இன்று நிறைவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  “கட்டுப்பாடற்ற முறையில்” நடந்து கொண்டதாக கூறி 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கிய நிலையில்,முதல் நாளில் இருந்தே 12 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டன.

இதற்கிடையில்,வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது.இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும்,செயற்கை கருத்தரித்தல் சட்ட திருத்த மசோதா,தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா போன்ற முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால்,வாக்களார் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வழி வகை செய்யும் இந்த தேர்தல் சட்ட திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்று கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர்.

அதே நேரத்தில்,பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில்,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை வரை நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,முன்கூட்டியே இன்று நிறைவு செய்யப்பட்டுள்ளது.

12 எம்பிக்கள் இடைநீக்கம் ரத்து தொடர்பாகவும்,நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் லக்கிம்பூர் கெரி வன்முறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்றும் கூறி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டதால்,முன் கூட்டியே குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில்,மக்களவை 82% உற்பத்தித்திறனைப் பதிவுசெய்தது என்றும் மாநிலங்களவை 47% உற்பத்தித்திறனை பதிவு செய்தது என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Recent Posts

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…

4 hours ago

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

10 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

11 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

16 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

1 day ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago