மீரட்டில் உள்ள ஆனந்த் மருத்துவமனையில் மூன்று கொரோனா நோயாளிகளும்,கே.எம்.சி மருத்துவமனையில் நான்கு கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர்.இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறைதான் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்திரப்பிரதேசத்தில்,கொரோனா தொற்று பரவலானது அதிக அளவில் இருந்து வருகிறது.இதனால்,மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.ஆனால்,தங்கள் மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லவே இல்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பலமுறை மறுத்து வருகிறார்.
இந்நிலையில்,உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் ஏழு கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக இறந்துள்ளனர்.
அதாவது,மீரட்டில் உள்ள ஆனந்த் மருத்துவமனையில் மூன்று கொரோனா நோயாளிகளும்,கே.எம்.சி மருத்துவமனையில் நான்கு கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர்.இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறைதான் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து,ஆனந்த் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சுபாஷ் யாதவ் தெரிவிக்கையில்,”எங்களுக்கு ஒவ்வொரு நாளும் 400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை,ஆனால் எங்களுக்கு 90 சிலிண்டர்கள் மட்டுமே கிடைக்கின்றது.மேலும்,நேற்று எங்களிடம் இருந்த மொத்த ஆக்ஸிஜன் சிலிண்டரும் முடிந்துவிட்டது.இதனால்,ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக மூன்று கொரோனா நோயாளிகள் இறந்தனர்”,என்று கூறினார்.
மேலும்,கே.எம்.சி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சுனில் குப்தா இதைப்பற்றி கூறுகையில்,”நேற்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை எங்களிடம் ஆக்ஸிஜன் இல்லை. எங்களிடம் ஆக்ஸிஜன் இருந்திருந்தால் நான்கு கொரோனா நோயாளிகளை காப்பாற்றியிருப்போம்” என்று அவர் கூறினார்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…