DMK MP TR Baalu [Image source : Sansad TV]
நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், இன்று எதிர்கட்சியினர்களால் கொண்டுவரப்பட்ட மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தின் மீது எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்துக்களை, குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். தற்போது திமுக எம்பி டி.ஆர்.பாலு மக்களவையில் பேசினார்.
அவர் கூறுகையில் , பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குறிப்பிட்டார். வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரித்துள்ளது. பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒவ்வொரு தனிநபரின் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என கூறினீர்கள் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.
பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போதெல்லாம் திருக்குறள் சொல்கிறார் . ஆனால், தமிழகத்திற்கு தேவையானதை செய்யவில்லை. மதுரை எய்ம்ஸ்க்கு பணம் ஜப்பானிலிருந்து வருகிறது என்கிறார்கள். இன்னும் மதுரை எய்ம்ஸ் கட்டடம் துவங்கிப்படவில்லை.
சேது சமுத்திர திட்டம் என்ன ஆனது.? மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி – சோனியா காந்தி தொடங்கி வைத்த திட்டம் என்பதால் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து குறைந்த விளக்கு குருடாயில் எனப்படும் பெட்ரோல் டீசல் மூல பொருள் எண்ணையை வாங்கி அதன் மூலம் விற்கப்படும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து காணப்படுகிறது.
மணிப்பூர் கலவரம் 3 மாதங்களாக தொடர்கிறது. அங்கு 143 மக்கள் இறந்துள்ளார். ஆயிரக்கணக்கனோர் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுளள்னர். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை முன்னெடுக்கவில்லை என திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…
லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…