சீரியல் கில்லர் சயனைடு மோகனுக்கு நாளை மறுநாள் தண்டனை..?

Published by
murugan

கர்நாடக மாநிலத்தை சார்ந்த சீரியல் கில்லர் சயனைடு மோகன் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர்களுடன் உல்லாசமாக  இருந்து கடைசியில் கொலையும் செய்துவிடுவான்.

சயனைடு மோகன் கடந்த  2003 முதல் 2009-ம் ஆண்டு வரை  20 பெண்களை ஏமாற்றி கொலை செய்துள்ளன். அவன் கொலை செய்த அனைத்து பெண்களையும் சயனைடு கொடுத்து கொலை செய்துள்ளான். அதனால், சயனைடு மோகன் என்றே கூறுகின்றனர். பெண்களிடம்  முதலில் வேலை வாங்கி தருவதாக கூறுவார். வேலை கிடைக்கும் என்ற ஆசையில் பெண்கள் இவரிடம் தொடர்பு கொள்வார்கள். பிறகு, கழுத்து நிறைய நகை போட்டு வந்தால் வேலை கிடைக்கும் என கூறுவார்.

பின்னர், திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர்களுடன் உல்லாசமாக இருப்பார். காலையில் உல்லாசமாக இருந்த பெண்ணுக்கு ஒரு மாத்திரை தருவார். அந்த பெண்  என்ன மாத்திரை..? என்று கேட்டால் கர்ப்பதடை மாத்திரை என கூறுவார். ஆனால், அதுதான் சயனைடு அந்த பெண் சாப்பிட்டதும், அங்கேயே உயிரிழந்துவிடுவார். பின் நகைகளை எடுத்து கொண்டு தப்பி விடுவார்.

இந்நிலையில், 2009 -ம் ஆண்டு கேரளாவில் காசராகோடு நகரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை கொலை செய்தான். அந்த கொலை தான் சயனைடு மோகனின் 20-வது கொலை, இந்த வழக்கில் சயனைடு மோகனை நீதிமன்றம் குற்றவாளி எனக் கூறியுள்ளது. தண்டனை குறித்து நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன், சயனைடு மோகனுக்கு ஐந்து வழக்குகளில் மரண தண்டனையும், மூன்று வழக்குகளில் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. மரண தண்டனைகளில் இரண்டு பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago