கொரோனா தடுப்பு களப்பணியில் முன்னின்று பணியாற்றும் காவலர்களை கௌரவப்படுத்த செப்டம்பர் 1ஆம் தேதியை ஆண்டுதோறும் காவலர் தினமாக கொண்டாடப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்தார்.
மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு ஊரடங்கு பணியில் ஈடுப்பட்டு வந்து கொண்டிருக்கும் காவலர்களுக்கும் கொரோனா அதிகரித்து வருகிறது.
இது குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, ‘ மேற்கு வங்கத்தில் இதுவரை 4000க்கும் அதிகமான போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 காவலர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு களப்பணியில் முன்னின்று பணியாற்றும் காவலர்களை கௌரவப்படுத்த செப்டம்பர் 1ஆம் தேதியை ஆண்டுதோறும் காவலர் தினமாக கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்கான நிகழ்ச்சி நடைபெறுகையில், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த 18 போலீசார் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு பணி ஆணை வழங்கவும் அரசு முடிவெடுத்துள்ளது.’ என மம்தா பேனர்ஜி கூறினார்.
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…