தெலுங்கானா : ஜனகாம – பசரமட்லா கிராமத்தைச் சேர்ந்த நிம்மல நரசிங்கராவ் என்ற விவசாயி தனது நிலத்தை மற்றவர்களுக்கு வழங்கியதாக கூறி ஆட்சியர் கட்டிடத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிருடன் இருந்தும் இறந்தது போல் தங்கள் நிலம் மற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வேதனை தெரிவித்த நிம்மல நரசிங்கராவ் வேகமாக கையில் ஒரு பூச்சி மருந்து பாட்டிலுடன் ஆட்சியர் கட்டிடத்தில் ஏறி குடித்து கொண்டு இருந்தார். கீழே இருந்த அதிகாரிகள் மற்றும் மக்கள் சிலர் கீழே இறங்குங்கள்…கீழே இறங்குங்கள் என்பது போல கூறினார்கள்.
ஆனால், நிம்மல நரசிங்கராவ் கேட்காமல் கையில் வைத்து இருந்த பூச்சி மருந்தை குடித்தார். இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவலை கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மேலே சென்று நிம்மல நரசிங்கராவை பிடித்து கீழே கொண்டு சென்றார்கள்.
பின் பூச்சி மருந்தை அவர் அதிகமாக குடித்த காரணத்தால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று போலீசார் காரில் ஏற்றி சிகிச்சைக்கு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்க முயற்சி செய்தார்கள். ஆனால், தன்னுடைய நிலம் போன விஷயத்தில் நொந்து போன நிம்மல நரசிங்கராவ் காரில் எற மறுத்துள்ளார்.
பிறகு காவலர்கள் அவரை பிடித்து காருக்குள் தூக்கி வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . தனது நிலத்தை மற்றவர்களுக்கு வழங்கியதாக கூறி ஆட்சியர் கட்டிடத்தில் ஏறி விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…