கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் வாட்ஸ் அப்பில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆபாச வார்த்தைகள் அடங்கிய தகவலை அனுப்பியுள்ளார்.
இதில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுள் ஒருவர் இதன் காரணமாக தலைமை செயலாளர் டோம் ஜோசிடம் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் தக்க நடவடிக்கையெடுப்பதாக கூறியுள்ளார்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ளார்.இதன் அடிப்படைடையில் தலைமை செயலாளர் அந்த மூத்த அதிகாரியை அழைத்து விசாரித்துள்ளார்.
இந்நிலையில் முதலில் நான் அவ்வாறு செய்யவில்லை என்று கூறிய அவர் ,அந்த பெண் அதிகாரி கொடுத்த ஆதாரங்களை காட்டியதும் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.அந்த பெண் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்குமாறு செயலாளர் கூறியுள்ளார்.
பின்னர் அந்த மூத்த அதிகாரி அந்த பெண் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டதும் முதல்வரை சந்திக்காமல் விட்டுள்ளார்.ஆனால் இந்த தகவல் முதல்வர் பினராயி விஜயனுக்கு தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக முதல்வர் அந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியை முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…
சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…
சென்னை : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து அவர்கள் சொந்த…