பிரதமர் மோடியை புகழ்ந்த உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • பிரதமர் மோடி பன்முகத் திறமை கொண்ட அறிவாளி, சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொலைநோக்கு சிந்தனையாளர் என உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா புகழ்ந்துள்ளார்.

டெல்லியில் நீதித்துறையும் மாறிவரும் உலகமும் என்ற தலைப்பில் 2020-ம் ஆண்டுக்கான சர்வதேச நீதித்துறை மாநாடு உச்ச நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் பலரும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். இதையடுத்து மாநாட்டின் நன்றி உரையில் பேசிய உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அருண் மிஸ்ரா, உலக அளவில் சந்தித்து உள்நாட்டில் செயல்படும் பல்துறை வித்தகர் நரேந்திர மோடி அவர்களின் உரைக்கு எங்களுடைய நன்றியைத் தெரிவிக்கிறோம் என்று கூறினார்.

இதையடுத்து பேசிய அவர், இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும் உலக மக்கள் அனைவரும் நம் நாடு எப்படி இயங்குகிறது என்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். சர்வதேச அளவில் தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பொறுப்புணர்வு மற்றும் நட்புமிக்க நாடாகவும் விளங்குகிறது. அரசியலமைப்புகளுக்கு உட்பட்டு அமைதியான, பாதுகாப்பான மற்றும் பயங்கரவாதம் இல்லாத ஒரு நாடாக இந்தியா விளங்குகிறது.

மேலும் காலாவதியாகிப் போன 1500 சட்டங்களை நீக்கியதை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடியையும், சட்டத்துறை அமைச்சரையும் அவர் புகழ்ந்துரைத்தார். பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச சமூகத்திற்கு நல்ல உறவாக இந்தியா திகழ்வதாக கூறினார். மேலும் பன்முகத் திறமை கொண்ட அறிவாளியும், உலக தரத்தில் சிந்தித்து, உள்நாட்டிற்காக பாடுபடும் தலைவருமான பிரதமர் மோடியின் பேச்சு, கருத்தரங்கிற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருந்ததாக அருண் மிஸ்ரா குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

11 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago