மூத்த பத்திரிக்கையாளர் ராஜ்குமார் கேஸ்வானி கொரோனாவால் மரணம்..!

Published by
Sharmi

போபால் விஷவாயு சம்பவம் குறித்து முன்பே எச்சரித்த மூத்த பத்திரிகையாளர் ராஜ்குமார் கேஸ்வானி கொரோனாவால் உயிரிழந்தார்.

ராஜ்குமார் கேஸ்வானி நியூயார்க் டைம்ஸ், என்.டி.டி.வி., டைனிக் பாஸ்கர், தி இல்லஸ்ட்ராடெட் வீக்லி ஆப் இந்தியா, ஞாயிறு, இந்தியா டுடே மற்றும் தி வீக் போன்ற முக்கிய பத்திரிகை நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ளார். உலகின் மிக மோசமான போபால் விஷவாயு கசிவு 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2-3 ஆம் தேதிகளில் இரவில் நடந்தது. ஆனால், இந்த சம்பவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ராஜ்குமார் கேஸ்வானி எச்சரித்திருந்தார். இதில் பல பேர் உயிரிழந்தனர்.

தற்போது, ராஜ்குமாரின் மகன் ராணக் வெள்ளிக்கிழமை அன்று கேஸ்வானி கொரோனாவால் இறந்ததாக தெரிவித்தார். 72 வயதான கேஸ்வானி கொரோனாத் தொற்றால் ஏப்ரல் 8ஆம் தேதி பாதிக்கப்பட்டார். அதன் பிறகு இவர் ஏப்ரல் 20 ஆம் தேதி குணமடைந்துள்ளார். அதன் பிறகு, ஏப்ரல் கடைசி வாரத்தில் இவர் நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில், இவர் கொரோனா பாதிப்பால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இறந்துள்ளார்.

இதற்கு மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அவரது இரங்கலை தெரிவித்தார். அதில் அவர், “போபால் எரிவாயு சம்பவத்திற்கு முன்னரே அதன் பாதுகாப்பு குறைபாடுகளை பற்றி கவனிக்க வேண்டும் என்பதை குறித்து கேஸ்வானி திறம்பட செயல்பட்டார்” என்று கூறியுள்ளார்.

மேலும், மூத்த பத்திரிக்கையாளர் தீபக் திவாரி, “டிசம்பர் 2-3, 1984 யில் நடந்த போபால் எரிவாயு சம்பவம் குறித்து ராஜ்குமார் கேஸ்வானி முன்பே எச்சரித்தார்” என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago