மூத்த காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று மதியம் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமாகிய ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று மதியம் மங்களூரு யெனெபோயா மருத்துவமனையில் காலமானார். கடந்த ஜூலை மாதம் மூளையில் இருந்த கட்டியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்த முன்னாள் அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்கள், தனது வீட்டில் யோகா பயிற்சி செய்யும் பொழுது, தலையில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று மதியம் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ராஜ்யசபா எம்பி ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்களின் மறைவு தனக்கு வருத்தம் அளிப்பதாகவும், இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்காக தான் வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…