காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஏக்நாத் கெய்க்வாட் கொரோனாவால் உயிரிழந்தார்.
கொரோனா நெருக்கடிக்கு மகாராஷ்டிரா தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏக்நாத் கெய்க்வாட் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
ஏக்நாத் கெய்க்வாட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மும்பை முன்னாள் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இவரது மகள் வர்ஷா கெய்க்வாட் தற்போது மாநில கல்வி அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
கெய்க்வாட் மும்பையின் தாராவி தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். கூடுதலாக, அவர் 2004-2009 வரை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். மேலும், மும்பை காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் நேற்று 66,358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 44,10,085 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, 6,72,434 பேர் மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…
ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…
சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…