காங்கிரஸ் மூத்த தலைவர் ஏக்நாத் கெய்க்வாட் கொரோனாவால் உயிரிழப்பு.!

Default Image

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஏக்நாத் கெய்க்வாட் கொரோனாவால் உயிரிழந்தார்.

கொரோனா நெருக்கடிக்கு மகாராஷ்டிரா தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏக்நாத் கெய்க்வாட் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

ஏக்நாத் கெய்க்வாட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மும்பை முன்னாள் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இவரது மகள் வர்ஷா கெய்க்வாட் தற்போது மாநில கல்வி அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

கெய்க்வாட் மும்பையின் தாராவி தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். கூடுதலாக, அவர் 2004-2009 வரை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். மேலும், மும்பை காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் நேற்று 66,358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை  44,10,085 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது,  6,72,434 பேர் மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்