திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாள்தோறும் ஏராளமான மக்கள் செல்கின்றனர்.அவர்களில் 50 சதவீத மேல் தமிழகத்தை சார்ந்தவர்கள் செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதி கோயிலில் நாளை மற்றும் 17-ம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு தரிசனத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கு மாதம் 2 நாட்களுக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு இலவச சிறப்பு தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதனால் நாளை மற்றும் 17-ம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு 1,000 பேரும் , மதியம் 2 மணிக்கு 2,000 பேரும் , மாலை 3 மணிக்கு 1,000 பேரும் என மொத்தம் 4,000 பேர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்கான டோக்கன் திருமலை அருங்காட்சியகம் எதிரில் உள்ள கவுன்டரில் ஆதார் அட்டையை காட்டி பெற்றுக்கொள்ளலாம். மேலும் நாளை மற்றும் 18-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு தரிசனம் செய்யஅனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் கூறியுள்ளது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…