கேரள முதல்வரை சந்தித்த சேகுவாராவின் மகள்!

Default Image

கியூபா நாடு அமெரிக்காவின் பிடியில் இருந்த போது பிடல் கேஸ்ட்ரோவுடன் இணைந்து ஆயுதம் ஏந்தி புரட்சி செய்தவர் சேகுவாரா ஆவார்.இவர் தென்னாபிரிக்காவில் உள்ள அர்ஜென்டீனாவை பிறப்பிடமாக கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர் ஆவார்.

மேலும்  மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.

மேலும் நாடு விடுதலை அடைந்த போது அளிக்கப்பட்ட அரச பொறுப்பை வாங்க மறுத்து பிற நாடுகளின் விடுதலைக்காக போராடபோவதாக கூறி சென்றவர்.

மேலும் உலக அளவில் இவருக்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது.மேலும் கேரள மக்கள் இவரை முக்கிய தலைவராக போற்றுகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை 28-ம் தேதி டெல்லி வந்திருந்திறங்கிய சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா,விமானம் மூலம் கேரளமாநிலத்தில் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வந்திறங்கியுள்ளார்.

பின்னர் அன்று மதியம் கேரள முதல்வர் பினராயி விஜயன் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார்.மேலும் கேரளாவில் ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற இருக்கும் மாநாட்டில் அலெய்டா குவேரா பங்கேற்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

பினராயி விஜயனைச் சந்தித்துப் பேசிய சேகுவேராவின் மகள் அலெய்டா!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்