ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டம் நத்தம் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேற்று நள்ளிரவு ரகசியமாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். அப்போது அங்கிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கியுள்ளனர்.
இதனையடுத்துஅப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு பயங்கரவாதி பிடிபட்டுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறதாம். நேற்று இரவு 12 மணியளவில் தொடங்கிய துப்பாக்கிச்சூடு 6 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…