செப்டம்பர் 1 முதல் 9-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
ராஜஸ்தானில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பற்றி அறிவித்துள்ளது. அதன்படி பள்ளிகளில் 50% மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக பங்கு பெற வழிவகை செய்துள்ளனர்.
மேலும், காலை 7.30 மணி முதல் 12.30 மணி மற்றும் 12.30 மணி முதல் 5.30 மணி வரை இரண்டு பிரிவுகளாக 9, 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நடைபெறும். அதேபோல், காலை 8 மணி முதல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 1 மணி முதல் 6 மணி வரை 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நடைபெறும். இதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பள்ளிக்கு தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மட்டுமே வர வேண்டும்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…